சனி, 4 பிப்ரவரி, 2017

தொடுகை.

பூக்களாகத் தூவிக்கொண்டிருக்கும்
இந்தப் பனித்துளிகளைப்போல
மகிழ்ச்சிகளை விசிறிவிடச் சித்தமாயுள்ளேன்
இத்தினத்தில்.
மன்னித்தல்களும்
அவற்றைப் பெறுதல்களுக்குமான
இன்றொரு பொழுதின் நீட்சி குறையாதிருக்கட்டும்
சாளரத்தின்வழி தோன்றும்
அந்த வானத்தின் தொடுகைபோல.

வி. அல்விற்.
01.01.2017.

கருத்துகள் இல்லை: