நமது உறவுக்கான உடன்படிக்கையானது
இரத்தம் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது.
இம்மாபெரும்
உடன்படிக்கையின் நிமித்தம்
அனைத்தையும் பொறுத்திருக்கிறேன்
இந்தக் குளிர் விலகி துளிர்த்தலுக்காகக்
காத்திருக்கும் மரம் போல.
வார்த்தைகளின் செருகல்களிலும்
செயல்களின் கிழித்தல்களிலும்
அது இரத்துச்செய்யப்பட முடியாததென்று
முன்னோர்களின் பெயரால்
இன்னும் நம்பிக்கை கொண்டுள்ளேன்.
அவர்களின் காற்சுவடுகள் அழியாதிருக்கட்டும்.
அவர்களின் பேரரசுகள் மறைக்கப்படாதிருக்கட்டும்.
அவர்களின் கண்களிலிருந்தெழும்
ஒளிவீச்சுக்கள் நம்மீது முழுமையாகப் பரவட்டும்.
இதோ!
நாம் மீண்டும் திருமுழுக்குப் பெறும் காலம் வந்து விட்டது!
வி. அல்விற்.
06.01.2017.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக