சனி, 4 பிப்ரவரி, 2017

சுமை.

தொலைத்தவர்களைச் சுமந்து கொண்டு
கனத்தபடி அலைகிறது நம்மினம்.

உணவிழந்த வயிறுகளின் கூக்குரலும்
பலமிழந்த குரல்களின் கேவல்களும்
முடிவுறாத பயணங்களுக்குள் சிக்கித் தவிக்கின்றன.

இன்னமும் எத்தனை காலம்தான் ஆண்டவனே!

பிள்ளை பெறாத வயிறுகள் பாக்கியம் பெற்றனவோ?

வி. அல்விற்.
25.01.2017.

கருத்துகள் இல்லை: