கடலாகி கரு முகிலாகி
இடியாகி கடும் மின்னலோடு
மழையாகி நிலம் வடிந்தோடும்
பொருளாகி தமை ஈந்து
கொடையாகி அறம் நின்று
தடை நீக்கி குலம் வாழ
உமை ஆண்ட கோலுக்கு
அவதார வழிக் கொண்ட
முத்தமிழ் பெற்றெடுத்த
முடி கொண்ட வீரர்களே
பெரு மன வெளிப் பரப்பில்
மலையாக்கி உளி கொண்டு
வடித்துள்ளோம் உம் வதனங்களை
வரலாறு நமை ஆளும்
வீழாத நீள் பயணத்தில்
வணங்குகிறோம் மறவாமல் உம்
கனவுகளை நெஞ்சிருத்தி.
வி.அல்விற்.
27.11.2017.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக