வானவில் வண்ணங்களை
எண்ணி முடிப்பதற்குள்
கலைந்து மறைகிறது
தூங்க விடாத கனவுகள் போல.
கனவுகளை அடுக்கி
சேர்த்து முடிப்பதற்குள்
தகர்ந்து போகிறது
ஷெல் பாய்ந்த வீடுபோல.
வீடு முரணுகளுக்குள் இடிபட்டு
குறையன்பில் தள்ளாடுகையில்
வீழ்ந்து போகிறது வாழ்க்கை
ஆழ் கிணற்றுள் பார்த்து விழுந்தவன் போல
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக