இளமை உருகி கரைந்து முடிந்து
உள்ளம் உடைந்து சிதறல்களாகி
கைகள் இருந்தும் முடமாக்கப்பட்டு
கண்களால் மட்டும் கவிதை வரைந்து
கால்கள் இருந்தும் நடை மறந்து
நாவிருந்தும் அறுக்கப்பட்டு
மௌன மொழியே அமுலாக்கப்பட்ட
சுதந்திர தேச வானிலிருந்து உங்கள்
உண்மைச் சிறகடிப்பைப் பார்க்க முடியுமா
அல்லது
ஊனப் பறவைகளாய்த் தத்தி வருவீர்களா
வி.அல்விற்.
22.01.2014.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக