புதன், 20 பிப்ரவரி, 2013

எழுவோம்

மீண்டும் புண்படுவது நாமே 
எதுவுமே எங்களுக்காய் 
இயங்காமல் நின்றதில்லை
எழுதப்படாத சட்டங்கள் 
அமுல்படுத்தப்படுகின்றன 
நீதி கண்களைக் கட்டிக் கொண்டு 
வாளாதிருக்கின்றது
ஈரமில்லா வியாபாரிகளிடம் 
நியாயம் கேட்கின்றோம் 
கூக்குரல்கள் யாரையும் 
சலனப்படுத்தவில்லை
உணர்வுகள் இல்லா உலகம்
கடந்து போகப் பார்க்கிறது
புரட்டிப் போடும் மாற்றம்
எங்கிருந்து வரும்
எப்படி வரும்
ஒன்றாய் ஆயிரமாய் இலட்சமாய்
பலமாய்ப் பெருகின்
சத்தியம் சாத்தியமே
வீழ்ந்து கிடக்கிறோம்
வட்டம் போட்டு ஆணியடித்து
உட்கார்ந்து இருக்கிறோம்
அதற்குள் தனித்தனியாய்
சம்பந்தமில்லா மனிதர்களாய்
பழி வாங்குகின்றோம்
எங்களை நாங்களே
துக்க விசாரிப்புகளுடன்
நாமும் கடந்து போகப் பார்க்கிறோம் 

அவர்களைப் போல...









கருத்துகள் இல்லை: