வெள்ளி, 1 பிப்ரவரி, 2013


சலங்கை மணிச் சிதறல் நகை 
மெல்லிசை இளங் காற்றுடன் 
எனைத் தழுவி கடக்க 
எட்டிப் பிடித்ததை 
எனக்குள் வைத்திருக்க
எண்ணித் துணியுமுன் 
உன் இமை மூடித்திறந்து 
ஆணியடித் தறைந் தென்னை
புயலாய் சுழன்றடித்துக் 
கடந்து போகிறாய்

உள்ளத்தை ஊடறுத்துக்
கள்ளத்தனம் செய்கிறாய்
உயிருடன் உறைய விட்டு
உரக்கச் சிரிக்கிறாய்
எதிலுமில்லை அசைவு என்போல்
என் னிதயத் துடிப்பு
உன் காதில் தூது வந்தும்
தூரத்தி லின்னும் கண் சிமிட்டுகிறாய்
கை கொடுத்துத் தூக்கிவிடு
எனக்காக வல்ல
உலகம் இயங்குவதற்காய்!

வி. அல்விற்.
31.01.2013.

கருத்துகள் இல்லை: