அன்று....
வீதிக்கு வீதி
கைப்பையிலிருந்து சப்பாத்து வரை
அலசல்கள் அதிர்ந்திருந்தது
காணும் கண்களில்
கனத்திருந்தது பதட்டம்
பின்னொருநாள்
எல்லோரும் பிதற்றியிருந்து
கைபிசைந்த நேரம்
சுழன்ற ஒர் புயலில்
கழன்றன கள்ளத்தனமாய்
பதுங்கின புற்றுக்குள்
வேறொரு நாள் பார்த்து
தன் மீள் வருகைக்காய்
எத்தனை வரவுகள்!!
வரவும் செலவுமாய்
கூட்டிக் கழித்ததில்
மிஞ்சியிருப்பது
மனிதமில்லா நாகரீக உலகின்
வரவு மட்டுமே
இன்றிரவு இருட்டுள்
எதுவுமே நடக்கும்
இன்னொரு செலவாய்ப் போகும்
வழமைபோல் அவர்களுக்கு
இவர்கள் இன்னும்
வரவுக் கணக்கு
பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக