புதன், 6 பிப்ரவரி, 2013

என் ஊருக்கு வழி கேட்டு....

என் ஊருக்கு வழி கேட்டு 
தொலைந்திருக்கிறேன் 
ஒரு பக்கம் வயல் வெளி 
மழைத் தொடர்கள் இன்னொரு புறம் 
மறுபுறம் பரந்திருக்கும் கடல் 
வேறொரு பக்கம் பாலைவனம் 
வாய் பிளந்து பயமுறுத்துகின்றன 
சத்தங்கள் காதடைத்து 
முணுமுணுத்து பின் 
அடங்கியே விட்டது 
எதுவுமே இல்லா தனிமையில்
உடல் விறைத்திருக்க
இடையிடையே ஏதேதோ முனகல்கள்...
பெரிதாய் எழுமாப்போலில்லை
அதைக் கண்டு கொள்ளவும் எவருமில்லை
எதைக் கடந்தால்
எதைக் கொடுத்தாவது
என் ஊர் போய்ச் சேரலாம்
சில பாதைகள் அடைபட்டிருக்குமோ
தடை தாண்ட முடியாது
விலக்க வேண்டும்
கருக்கலுக்குள்
ஊர் போய் சேர வேண்டும்!

கருத்துகள் இல்லை: