இதுபோல்....
என் வீட்டு முற்றத்தில்
பணக்கார வெளிச்சமில்லா
சிறு ஒளியில்
அள்ளித் தெளிக்கப்பட்ட
நட்சத்திரங்களுக்குள் ஒளித்தபடி
சாம்பல்நிற முகிலாடை போர்த்தி
தேவதையாய் பவனிவரும்
நிலா வொளியில்..
இப்படிக் கதிரை போட்டு
இரகசிய வார்த்தைகளாலல்ல..
முற்றத்தில் சஞ்சலமின்றி
சுற்றியிருந்து அம்மாவின்
குழையல் சோறு பகிர்ந்துண்டு
யாருமெம்மை சீண்டாமல்
நேரம் பார்க்காமல் விழித்திருந்து
மனம் விட்டுச் சிரிக்கும்
நாளொன் றெனக்கமைந்தால்.....
அன்று
என் சுதந்திரம் பிரகடனப்படுத்தப்படும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக