வெள்ளி, 1 பிப்ரவரி, 2013


கொட்டி முடித்த மழையில்
உடைந்திருந்த பள்ளங்களில்
நிறைந்திருக்கும் மிச்சங்களில்
கால் பதித்து துள்ளி விளையாடி
சேறுபூசிய அழுக்காகிய
காலங்கள் அழியவில்லை
இன்னும் என்னால்
முடியும் அப்படி.....
என்தேசம் வாவென்றென்னைக்
கை நீட்டி
என்வாசல் தந்து
வாடைக் காற்றில் அறையும்
என் அறையன்னலூடாய்
என் கடலை இரசிக்க விடுமானால்..
அதுவரை...
இரவல் தேசத்தின்
இரவல் மழையில்
இழந்தவற்றுடன் இருட்டில்
குடைக்குள் தனியே
நனையாமல் ந(க)டக்கிறேன்!

வி.அல்விற்.
01.02.2013

கருத்துகள் இல்லை: