வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

என் ஆத்மா


தெருவைக் கடந்து செல்லும் 
நிர்மலமான இரவில்
நாங்கள்  பிரிந்து போனோம்
நீ சென்ற பாதையை நான் நோக்க 
உனது மென்நீல வானத்தில்  
அள்ளி வீசப்பட்ட நட்சத்திரங்களின் கதிரொளி 
எனது கண்களைக் கூசச் செய்கிறது.

ஆயிரம் விளக்குகள் சேர்ந்து ஒன்றாய்  
சுடர்விட்டு எரிந்து பிரகாசித்து 
தகிக்க வைக்கும் நேரம் 
நட்சத்திரங்களும் ஆத்மாக்களும் 
தமக்குள் ஆழமாக பார்வையை 
மாற்றிக் கொள்ளுகின்றன 

உன் திசை நோக்கி
உன் முடிவிடம் பார்க்க முயற்சிக்கிறேன் 
மேகங்களூடாக இறங்கி என் நினைவாகிறாய் 
மேலிருந்து என் சிந்தைனை ஆகிறாய் 
உன் ஆவியை எனக்குள் சிறை வைத்து 
உன் அதிசயங்களை அதில் வைத்துள்ளாய்!

கருத்துகள் இல்லை: