புதன், 6 பிப்ரவரி, 2013

நான் நானாய்


இன்றைய விடியல் எனக்கு நலமாயிருந்தது 
நேர எழுப்பியின் அலறலில் 
அரக்கப் பறக்க பாதி நித்திரை முறித்ததை 
முறைத்து  தலையில் தட்டி 
அதிகாலையை நான்தான் பிரசவிப்பதுபோல 
யன்னல் திரை விலக்கி கண்களால் 
காலநிலை அளந்து 
அடங்கியிருக்கும் தெரு கிழித்து ஓடி 
பலநிற முகமூடிகளுடன் 
இயல்பாயிருக்க கடினப்படும் 
இயல்பற்ற நிலையிலிருந்து 
இன்று  விடுமுறை
நான் நானாய் 
என் சிந்தனைகளுடன்..... 

கருத்துகள் இல்லை: