வெள்ளி, 2 அக்டோபர், 2015

விட்டு விடு!

இது உனது சிம்மாசனமாகவிருப்பதில்
எனக்கேதும் இடையூறில்லை

நீ அரசனாகவே இருந்து கொள் 

உனது கண்ணசைவுக்கு
சேவகர்கள் காலடியில் இருக்கட்டும் 

உனது புன்னகைக்காக
புனையட்டும் புலவர்கள் புகழ்ப்பா

உனது பட்டாடையோடு
அணைந்து கொள்ள
தேவதைகள் தவமிருக்கட்டும்

என்னை விட்டுவிடு!

உன் தங்க மாளிகையில் 
சிறையிருக்க எனக்கிசைவில்லை

உனது அகங்கார உபசரிப்பில்
உவப்பில்லை எனக்கு

உலகம்
எனது கண்களுக்குள் நிறைய
நான் உலாவர வேண்டும் 
கட்டப்படாமல்

விட்டுவிடு என்னை! 

கண்டு கொள்ளவும் 
கற்றுக்கொள்ளவும்
இங்கே குவிந்து கிடக்கிறன
ஏராளமாய்.

வி. அல்விற்.

14.09.2015.

கருத்துகள் இல்லை: