வெள்ளி, 2 அக்டோபர், 2015

குழந்தைகளே!

நாங்கள் நினைக்கின்றோம்
உங்களது சிரிப்புக்களை
சிதறடிக்கவில்லை என்று

நாங்கள் நினைக்கிறோம் 
உங்கள் கனவுகளை
கலைக்கவில்லை என்று

நாங்கள் நினைக்கிறோம்
உங்கள் சுதந்திரத்தைப் 
பறிக்கவில்லை என்று

நாங்கள் நினைக்கிறோம்
உங்கள் சிந்தனைகளை 
மறுக்கவில்லை என்று

நாங்கள் நினைக்கிறோம்
உங்களது குரல்களை 
நசிக்கவில்லை என்று

ஆனாலும் 

தெரிந்தும் தெரியாமலுமாக
நாங்கள் இவற்றைச்
செய்ய மறப்பதில்லை

உரத்துப் பேசுங்கள் 
குழந்தைகளே!

முன்னால் பிறந்த எங்களுக்கு
உங்கள் வார்த்தைகளின் 
கனம் புரிய
காலமெடுக்கிறது.

வி. அல்விற்.

01.09.2015.

கருத்துகள் இல்லை: