திங்கள், 5 அக்டோபர், 2015

என் பிரிய சிசுவே!

காற்றலைகளற்ற இரவுப் பொழுதில்  
முழுநிலவின் ஒளி தெறிக்க 
அமைதியாய் அலையும் 
ஆழியாயிருக்கிறேன்.

உன்மீதான எனது பேரன்பை 
அங்கே அரவமற்ற கற்பாறைகளுக்குள்
ஒளித்து வைத்திருக்கிறேன் 
யாரும் கண்டுகொள்ளாதபடி.

என் பிரிய சிசுவே!

இதோ! வானம் நிறம் மாறுகிறது
மானிடனின் அலைச்சல் போல
காற்றும் அசைக்கின்றது
ஒளிப்பிடத்தை உடைக்கும்படி.

காலம் முகிழ்த்துள்ளது
உன்னை நீ கண்டடையும்படி.
எனதுலகனைத்தையும் 
உன்வசமாக்கியுள்ளேன்

உன் கற்பனைக்குள் அடங்காத
எனது ஆசைகளை 
உனது கரங்களுக்குள் பொத்திக்கொள்
நீ மட்டுமே அறியும்படி.

வி. அல்விற்.

03.10.2015.

கருத்துகள் இல்லை: