செல்லமே!
அன்னையென்றெனை நினைந்து
அழுது கொண்டழைத்தாயோ
ஆராரோ பாடவோ கண்ணே
ஆவிதன்னைத் தரவோ மணியே
அள்ளியெடுக்கவோ உன்னை
அமுதமெடுத்து ஊட்டிடவோ
சிற்பமென நின்றென்னை
சிந்தை நிறைய வைத்தாயே
முத்தமிடக் குனிகையில் உன்
மெத்துக் கன்னம் தந்தாய்
பிஞ்சுவிரலால் கால்கோர்த்து
விஞ்சுமழகு காட்டியும் நீ
பொங்கிச் சிரிக்கையில்
பூமியே நின்று போச்சு
மொத்தமாய் மறந்தேனே
இன்னொன்றைப் பெற்றதாய்.
வி. அல்விற்.
18.09.2015.
( ஒஸ்லோவிலுள்ள Frognerparken எனப்படும் பூங்காவிலுள்ள சிற்பங்களுள் ஒன்று இது).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக