கனம்.
நான் திடமாயிருக்கிறேன்
என்கின்ற அறிவு
எனக்கு உதவுவதாயில்லை
எனது தேடல்களும்
முடிவதாயில்லை
இரவுகள் கொன்று தின்கின்றன
எனது தூக்கங்களை
பகல்களும் அமைதியைக்
கிழித்துக் கொல்லுகின்றன
எனதிருப்பே என் நிழலாய்
எனக்கச்சமூட்டுகிறது
பயமொன்றை அறியாதிருந்தேன்
முன்னொரு பொழுதில்
அதுவே எனக்குள் இப்போது
பெரும் பூதமாய் எழுந்தாடுகின்றது
இப்போது நான் தனிமையிலில்லை
விரட்டப்பட்டுக் கொண்டேயிருக்கிறேன்
ஏதோவொன்றால்.
வி. அல்விற்.
19.09.2015.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக