திங்கள், 26 அக்டோபர், 2015

காலம் நழுவிஉள்ளது.

பெரு மரமாயிருக்கிறேன் இக்கணம் 
வேர்களைப் பற்றியிருக்கும் எனதடியில்
நிழல்தரும் குளிர்மையில்
நீ இளைப்பாறும்படி
களைப்புறும் வேளைகளில்.

உற்றுப் பார்த்துக் கொள்!

என்னில் துளிர்க்கும்
உனக்கான சிந்தனைகளையும் 
பின்னொரு பொழுதில்
பசுமையாய் அசைந்தாடும் 
உனக்கான முதிர் கனவுகளையும்.

ஓ! என் பிரிய சிசுவே!

இங்கே
எனக்கானது என்று ஏதுமில்லை
பழுப்பேறி உன் காலடியில் வீழும் 
ஒட்டுவிட்ட இலைகளாய்
ஏதுமுனக்குத் தென்படுகின்றனவா?

ஓ!

காலம் நழுவிக் கிடக்கிறது
என் நிழல் போல.

வி. அல்விற்.

15.10.2015.

கருத்துகள் இல்லை: