திங்கள், 26 அக்டோபர், 2015

கனவுகளுடனான யுத்தம்.

தென்றலும் இதமும்
மலரும் அழகும் 
மழையும் சிலிர்ப்பும்
மங்கையும் மலர்வுமாக
பக்கங்களெல்லாம்

யாராலோ
நிரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன
இன்றைய பொழுதில்.

நான் மட்டும்....

கனவுகளுடன் 
யுத்தம் செய்து கொண்டிருக்கிறேன் நான் 
யாருமறியாத தனிமையில்.

அதுவேதான்!

தோற்கக் கூடாத யுத்தமிது

அழிச்சாட்டியம் பண்ணியபடி
உள்ளமர்ந்து எகத்தாளமிடுபவற்றை
அழித்துவிட வேண்டும் 

நானும்
எனக்குண்டானவையும்
அழியாதிருக்க.

வி. அல்விற்.
20.10.2015.


கருத்துகள் இல்லை: