எனது தூக்கத்தை மட்டுமே கலைக்கிறாய்
துக்கங்களைக் களைந்துவிட முயலாமல்
இருளுக்குள் நான் தொலைந்து கொண்டிருப்பதை
மழைக்குமுன்னரான மேகமென
உணர்த்திக் கொண்டிருப்பதை
மறுதலித்துக் கொண்டேயிருக்கிறாய்
கள்ளத்தனமாக.
வானுடைந்து நிலம் பெருக்கெடுக்கும் போது
நானதில் கரைந்து போவேன்.
ஓ!
அதன் பின்னரும் நீ வாழ்ந்திருப்பாயோ?
சமூகம் உனக்கு அங்கீகாரமளித்திருக்கிறது
எனதின்மை பற்றிய விளக்கமளிப்பதற்கு.
வி. அல்விற்.
02.03.2016.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக