ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

பிரதிபலிப்பு.

மனமூட்டங்களைப் போலவே
கனத்திருக்கும் வானத்திலிருந்து
அள்ளித் தெளிக்கப்படுகின்றன மழைத்துளிகள்.
தூறலின் நனைவில்
இறுக்கம் விலக்கி
குளிர்ந்து போகின்றது மனமும்.
காற்றுக் கலந்து இசையும் முழங்க
நடனமாடிக் களிக்கிறாள் மழைக்கன்னி
இரவுபகலாக ஓய்வின்றி.
மாமழையே!
ஒருசமயம்
சோர்வின்றிப் பொழிந்து நெகிழ்த்துகிறாய்.
மறுசமயம்
ஓவென்றழும் குழந்தையை ஒத்திருக்கிறாய்.
இதோ!
இந்தச் சாளரத்தின் ஒருபக்கம் நான்
மறுபக்கம் நீ!
நீ என்னைப் பிரதிபலிக்கிறாயா?
அல்லது நான் உன்னைப் பிரதிபலிக்கிறேனா?

வி. அல்விற்.
23.06.2016.

கருத்துகள் இல்லை: