புதன், 3 ஆகஸ்ட், 2016

அழகான கனவுகளை
ஊடறுத்துக் கலைக்கின்றன
அழிந்த வீடுகளும்
திரிபடைந்த ஊரும்.

இனியென்ன?

இதுதான் எமதென்பதா?
அதையே சரியென்பதா?

காலப்பதிவில்
ஆங்காங்கே அறுந்து தொங்குகின்றன
நினைவுகள்
துண்டிக்கப்பட்ட கனவுகள் போல.

வி. அல்விற்.
22.03.2016.

கருத்துகள் இல்லை: