ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

நீண்ட இரவுகள்.

தூக்கம் துக்கித்தபடி
விழிகளுள் விழுந்து கனக்க மறுக்கின்றது.
ஆழ்மனம் விழித்தபடியேயிருக்கின்றது
எதையோ முடிவு செய்து காத்திருப்பதுபோல.
பாம்புகள் ஊர்ந்து பயமுறுத்துகின்றன.
நிழல்கள் நிற்காமல் துரத்தியும்
மரங்கள் நடனமாடியபடியும் நெருங்க
முடிவடையாத தெருக்களில்
ஓடிக்கொண்டேயிருக்க
தப்பிக்கவியலா தடுப்புக்கள் திகைப்பூட்டி
கத்தவும் ஒலி பிறக்காததுமான
இந்தக் கொடும் இரவுகள்
மிக நீளமானவை.
செக்குமாட்டின் நிலையையொத்து
நினைவுகள் ஒரே வட்டத்தில்…..
இவை எங்கிருந்து பிறப்பெடுத்திருக்கும்?

நம் முதுசங்களை
காலம் அள்ளிக் கொண்டு போனவேளையிலோ?

வி. அல்விற்.
13.06.2016.

கருத்துகள் இல்லை: