ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

பிரிய சிசுவே!

காற்றில் அலையுண்டும் 
நீரில் மூழ்கித் திணறியும்
அழிவுறும் இப்பூமியில்
நேற்றைய துக்கங்களும்
நாளையின் கலக்கங்களும் 
நிரந்தரமென ஏதுமில்லை.
பிரகாசிக்கும் சுடரெனவோர் அமைதி
இக்கணம் பிறந்திருக்கிறது.
உயிர்த்திருக்கிறேன் நான்!
கொடுவாள்களும்
கடுங்கனவுகளும்
எரிநட்சத்திரங்களாய் வீழ்ந்து போகட்டும்
என் பிரிய சிசுவே!
என்னோடு உயிர்த்திரு
பகிர்ந்தெடு மகிழ்ச்சியை.

வி. அல்விற்.
04.06.2016.

கருத்துகள் இல்லை: