முந்தியும் பிந்தியுமான
மலட்டு விதைகளின்
விதைப்புக்களிலிருந்து
சிதைவடையும் நிலங்கள் போல
மாறிக் கொண்டேயிருக்கின்றன
அவர்களது முகங்கள்.
சிதைவடைகின்றன தொடர்ந்தும்...
அவர்களது விதைச்சல்களுக்கும்
அறுவடைகளுக்குமான
இடைக்காலங்களில் பொழியும்
வெள்ளத்தில் சிக்குண்ட பயிர்கள் போல.
பொய்யாகச் சிரித்தும்
மெய்யாக நடித்தும்
மெய்யாகிலுமே
ஒருவரை ஒருவர் தழுவிக் கொள்ளுகிறார்கள்
பொய்யிலும் பொய்யாக.
கூத்துக்கள் ஆடப்படுகின்றன
உச்சக் கட்ட ஆட்டமோ?
பாய் போட்டுத் தூர இருப்பவர்கள்
முகங்களின் பிரகாசிப்பில்
இலயித்துப் பிரமித்திருக்கின்றார்கள்
பூச்சுக்கள் கழன்று
சிதைவடையும் முகங்களை
நினைத்தும் பார்க்க விரும்பாமல்.
இருந்தாலும்....
கூத்துக்களும் முடியும்
ஒருநாள் நாயகர்களின்
பூச்சுக்களும் கழன்று போகும்.
மிஞ்சுவதோ....
விதைத்ததில் எஞ்சுபவை.
வி. அல்விற்.
28.04.2016.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக