புதன், 3 ஆகஸ்ட், 2016

வெளி.

இதுவோரேகாந்த உணர்வு
காற்றிலே கலப்பது போலவும்
பறவைகளுடன் பேசிக் கொண்டே
பறப்பது போலவும்
மேகங்களின் மேலே படுக்கையமைத்து
மெய்மறந்து தூங்குவது போலவும்
வான் வெளியின் கீழே
தனித்தமர்ந்திருப்பதும் போன்றதுமானதிது.

மிக நன்றாக இருக்குமோ!

இடைஞ்சல்களுள்ள
மனிதரற்ற வெளி நன்றாக இருக்குமோ!

சாத்தியங்களை நோக்கிய
நம்பிக்கைகளை கொண்டபடி
இன்னும் இப்பூமிப் பந்தின்மேலே
நாங்கள்....

வி. அல்விற்.
28.03.2016.

கருத்துகள் இல்லை: