பசுமையின் மணத்தை ஒத்திருக்கின்றது
உனதருகாமையின் பிடிப்பு.
இடறிக் கொண்ட காலங்கள்
நேர்வழிப்பட்டுக் கொண்டிருப்பதான உணர்வு.
நமது துக்கங்களின் கருமை
சற்றேவிலகி தெளிவடைகின்றன
எதுவாயிருக்கும் நமதெதிர் காலம்?
நம்பிக்கையின் நூலான
மீள்பிறப்பொன்று போலவா?
அல்லது,
இக்கண மகிழ்வில் திளைத்தலில் மட்டுமே
நிறைவாகிப் போவமா?
எதுவாயினும்
எத்தனங்களுக்குட்பட்டவுன் மறத்தல்களில்
நான் ஆறுதலுற்றிருக்கிறேன்.
அவை மீளாதிருக்கட்டும்!
உனதருகாமையின் இனிமையில்
பசுமை கொண்டிருக்கின்றதெனது மனம்.
வி. அல்விற்.
03.06.2016.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக