செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

அழிதல் நலம்.

இறுகியிருக்கும் இந்த வாழ்க்கை
எனக்கும் உவப்பானதாயில்லை.
செம்மஞ்சள் பூசிவரும்
அதிகாலை வானம் போல
அள்ளித் தெளிக்கவே
மனங்கொள்ளுகிறேன்
மகிழ்ச்சியை.
பிரகாசம் தெறிக்கும்
உனது கண்களின் சிரிப்பையும்
சொற்களில் பொங்கும்
நம்பிக்கை நுரைகளையும்
நெஞ்சில் பதிந்துவிட
முன்னாலே அமர்ந்திருக்கிறேன்.
புதைத்தவற்றை வெளியெடு!
எரிக்க வேண்டும்,
அல்லது அழிக்க வேண்டும்.
இல்லையேல் கரைத்துவிட வேண்டும்
அவை
மீண்டும் புதைபடாமலிருக்க.

வி. அல்விற்.
22.08.2016.

கருத்துகள் இல்லை: