புதன், 3 ஆகஸ்ட், 2016

எவையென்றறியாத
அல்லது
பகுத்தறியவியலாத
இருட் குகைக்குள்
தேடிக் கொண்டேயிருக்கிறோம்
இருக்கும்
என்றெண்ணிய பதில்களுக்காக.

எங்கே தொலைந்து போனோம்?

வழியானவர்கள் வாழ்விழக்க நாமே
வழியாகப் போனோமா?

அன்றேல்
(நா)மொழி புரள
நமக்கே யெதிராகிப் போனோமா?

என்று கடக்குமிந்தக் கொதிகாலம்?
எத்தனை விலை கேட்கும்
இன்னும் இன்னுமென...

வி. அல்விற்.
13.05.1016.
விக்கித்து நின்றோம்.

தொண்டைக்குள் நீரிறங்க
மறுத்தடம் பிடித்தது.
அடுப்படிகள் எரியாமல்
மூடியே கிடந்தன.

கனவினில் காட்சிகள்
பேயாட்டம் போட்டன.

இறுதிக் குரல்களை
இறுகியபடியே கேட்டிருந்தோம்.

ஆம்,
எமதுடல்கள் மட்டுமே பெயர்ந்திருந்தன.

வி. அல்விற்.
14.05.1015.


கருத்துகள் இல்லை: