புதன், 3 ஆகஸ்ட், 2016

மறந்திருக்கிறேன் பல கீறல்களை
நினைவுபடுத்திக் கொண்டே.
இந்தக் காலம் போதாதிருக்கிறது
மீள்திருத்தம் செய்வதற்கு.
மீண்டும் மீண்டும்
நமக்குள் நாமே முரணாகியபடி...

என்ன செய்வது?

நிமிர்ந்து நிற்கும் மரத்தையொத்த
உறவுகளிலிருந்து
வேர்களாகிப் பிரிந்து
படர்ந்தோடுகின்றன
வேற்றுமைகள்.

நமது சந்திப்புக்கள்
நான் என்னையும்
நீ உன்னையுமான
‘எங்களை’ மட்டுமே மௌனமாக விட்டிருக்கின்றன

அந்த மரத்தைப் போல.

வி. அல்விற்.
23.01.2016.

கருத்துகள் இல்லை: