புதன், 3 ஆகஸ்ட், 2016

வார்த்தைகளால் போர்த்தினாள்
பயத்தை விலக்கினாள்

கண்களால் கட்டளையிட்டாள்
பணிவைக் கற்றுத்தந்தாள்

அன்பை உணர்த்தினாள்
பகிரச் சொன்னாள்

உலகத்தைக் காட்டினாள்
வாழப் பணித்தாள்

தனித்தே நின்றவள்
போராடச் சொல்லித் தந்தாள்

ஓ! என் தாயே!
எனைச் சுமந்த உன்னை
சுமந்தபடியே செல்லுவேன்
இன்னும் இன்னும்
தொலைதூரம்வரை….

வி. அல்விற்.
29.05.2016.

கருத்துகள் இல்லை: