புதன், 25 ஏப்ரல், 2012

புலம்பல்

கரம் கொடுத்தோம் வடம் பிடிக்க

தோள் கொடுத்தோம் தூக்கிவிட

ஊண் உடை கொடுத்தோம்

பொருளும் கொடுத்தோம்

பெருமிதம் அடைந்தோம்

ஆர்ப்பரிப்பும் செய்தோம்

சுற்றுலாவும் சென்றோம்

தலைநகர் சிறப்புக் கண்டு வியந்தோம்

இறுமாப்பும் அடைந்தோம்

உலகினில் இவருக்கிணயில்லை என்றோம்

இத்தனையும் செய்தோம் அவருக்காய்

யாவும் இழந்தோம் - இன்று

ஆளுக்கொரு விதி செய்கிறோம்

இதுவும் நாமேதான் அவரின்மையால்

யாருக்கிங்கே அக்கறை எவரினி எழுவர் நல் வழி செய்ய

புலம்பத்தான் முடிகிறது

புரியவில்லை ஏதும்

கருத்துகள் இல்லை: