கரம் கொடுத்தோம் வடம் பிடிக்க
தோள் கொடுத்தோம் தூக்கிவிட
ஊண் உடை கொடுத்தோம்
பொருளும் கொடுத்தோம்
பெருமிதம் அடைந்தோம்
ஆர்ப்பரிப்பும் செய்தோம்
சுற்றுலாவும் சென்றோம்
தலைநகர் சிறப்புக் கண்டு வியந்தோம்
இறுமாப்பும் அடைந்தோம்
உலகினில் இவருக்கிணயில்லை என்றோம்
இத்தனையும் செய்தோம் அவருக்காய்
யாவும் இழந்தோம் - இன்று
ஆளுக்கொரு விதி செய்கிறோம்
இதுவும் நாமேதான் அவரின்மையால்
யாருக்கிங்கே அக்கறை எவரினி எழுவர் நல் வழி செய்ய
புலம்பத்தான் முடிகிறது
புரியவில்லை ஏதும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக