mercredi 18 avril 2012
பட்சிகளின் குரலிசையில் வைகறை மலர
இராப்போழுதுதின் கனம் குறைய
பனிக்குளிரின் மணம் கரைந்து
மென்தென்றல் மேனிவருட
பூமித்தாய் மெய் சிலிர்த்து
புல் பூண்டுகள் முளை விட
அரும்புகள் துளிர்விட்டு
எனைப்பாரென்று கண்சிமிட்ட
மொட்டுக்கள் மேலெழுந்து
அவிழ்ந்து விடத் துடிக்க
பார்த்திருக்கும் எம் மனம்
ஐந்து திங்களாவது வெளியே உலாவர அவாவ
வசந்தம் வந்து விட்டது !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக