புதன், 25 ஏப்ரல், 2012

பருவம்

mercredi 18 avril 2012
நீர்நிலை தேக்கத்தில்
நின்றாடும் தாமரையின்
காவலென சூழ்ந்திருந்து
பசுமையாய் படர்ந்திருக்கும்
பச்சிளம் இலைகளே!
நன்றே இளமையதை
நன்கறிவோம் என்றிருந்து
அங்கொன்றின்கொன்றாய்
சிந்தனையை சிதறடிக்கும்
வாலிபப் பருவம் போல் -உன்
கை மேல் நீரை ஒருங்கிணைக்கப்
பரிதவித்துப் பலனிழந்து -நீ
தடுமாறித் தத்தளிக்கிறாயோ




கருத்துகள் இல்லை: