நிறைவடையா மனக்கூட்டம்
நின்றாடும் சஞ்சலங்கள்
வடிவங்கள் கலங்கி
மழையும் வெயிலும்
சுழன்றடிக்கும் காற்றுமாம்
நிலையில்லா (அ)காலநிலை
எனைத்தொட்டுச் செல்வதேன்
எம் நிலை கேட்பதேன்
காத்திருப்புக்கள் காலமாகி
விழிகள் கனமாகி
பதிலில்லை என்னிடம் ஏன்
யாரிடமுமில்லை என்பேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக