களங்கமில்லா
நெஞ்சம் வேண்டும்
காண்பன
நலமாகவும் வேண்டும்
கனவுகள்
விரிய வேண்டும்
புதியனவதில்
பிறக்க வேண்டும்
நேரிய
சிந்தனையும் வேண்டும்
செயலில்
நிதானம் வேண்டும்-
அதை
செய்வதற்கோர்
திடமும் வேண்டும்
மனமதில்
ஆழ வேண்டும்
மனிதர்
ஓர் வசப்படவும் வேண்டும்
புவி
எம் கைப்பட வேண்டும்
வெற்றி
வாசல் தொடவும் வேண்டும்
அகிலம்
சுற்றி அறியவும் வேண்டும்
அதில்
திளைத்து மகிழ வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக