வெள்ளி, 27 ஏப்ரல், 2012

எண்ணம்


களங்கமில்லா நெஞ்சம் வேண்டும்
காண்பன நலமாகவும்  வேண்டும்  
 
கனவுகள் விரிய வேண்டும்
புதியனவதில் பிறக்க வேண்டும் 
 
நேரிய சிந்தனையும் வேண்டும்
செயலில் நிதானம் வேண்டும்- அதை 
 
செய்வதற்கோர்  திடமும் வேண்டும்
மனமதில் ஆழ வேண்டும் 
 
மனிதர் ஓர் வசப்படவும் வேண்டும்
புவி எம் கைப்பட வேண்டும்

வெற்றி வாசல் தொடவும்  வேண்டும்
அகிலம் சுற்றி அறியவும் வேண்டும்
அதில் திளைத்து மகிழ வேண்டும்

கருத்துகள் இல்லை: